வியாழன், பிப்ரவரி 20, 2025

உலக திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு

International Tipitaka Chanting in South India at Conjeevaram

உலக திரிபிடகம் உச்சரிப்பு -காஞ்சீவரம்

Tipitaka Saddhamma Sajjhayana 


உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ITCC நடத்தி வருகிறது. பெரும்பாலும் பகவான் புத்தருடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களில் லும்பினி, சாரநாத், புத்த கயா, குஷிநகர் திரிபிடகம் பாடுதல் நிகழவும். 

ITCC இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் 10/05/2008ஆம் தேதி கையொப்பமிட்டது. 18வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2023 to 12/12/2023 நடைபெற்றது. 19வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2024 to 12/12/2024 நடைபெற்றது. அதன் பிறகு தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டது.  

ITCC 06/02/2025 முதல் 18/02/2025 வரை மூன்று மாநிலங்களில் (தெலுங்கானா, கர்நாடக மற்றும் தமிழ் நாடு) புனித திபிடக சத்தம்மா சஜ்ஜாயனத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. தெலுங்கானாவில் 07/02/2025 முதல் 10/02/2025 வரை நான்கு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. பின்னர் கர்நாடகாவில் 11/02/2025 முதல்  16/02/2025 வரை  ஆறு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. தமிழகத்தில் 18/02/2025 ஒரு நாள் கஞ்சிவரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம் ஒத்துழைப்பில் பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் திரிபிடகம் பாடுதல் நிகழ்வு என்று முடிவானது.  

தெலுங்கானா

01. புத்தவனம் - 07/02/2025 

02. நாகார்ஜுன கொண்டா-  08/02/2025   

03. ஹைதராபாத் மகாபோதி - 09/02/2025

04. ஹுசைன் சாகர் ஹைதராபாத் 10/02/2025

கர்நாடக

01. கலபுரகி 11/02/2025 Kalaburagi 

02. சன்னாட்டி - Sannatti  12/02/2025

03. பைலாகூப் - Bylakuppe - 13/02/2025 

04. மைசூர் - 14/02/2025 

05. வடக்கு பெங்களூரு 15/02/2025 

06. பெங்களூரு மகாபோதி 16/02/2025 

தமிழ் நாடு 

காஞ்சிபுரம் - 18/02/2025 


அமைப்புகள் 

இங்கு கலந்துகொண்ட அமைப்புகள்

01. International Tipitaka Chanting Council (ITCC) சர்வதேச திபிடகா மந்திரப் பேரவை

02. Light of Buddha Dharma Foundation International (LBDFI) புத்த தர்ம அறக்கட்டளை சர்வதேச ஒளி

03. (Government of Tamil Nadu - State minorities commission (TSMC)) தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம். 

04. Tamil Nadu Buddhist Sanga Council (TNBSC)  தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை 

ITCC  நோக்கம்

01. புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் அல்லது பிற புனித தலங்களில், பாலி திபிடகம் என்று அழைக்கப்படும் புத்தரின் புனித நூல்களை ஆண்டுதோறும் உச்சரிப்பதை ஆதரித்தல், ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்.

02. அனைத்து நாடுகளிலிருந்தும் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தேடுதல் மற்றும் ஆண்டுதோறும் திபிடக மந்திர விழாவில் தேரவாத பாரம்பரியத்தின் மகாசங்கத்தினரை ஒன்று திரட்டுதல். 

03. புத்தரின் அசல் போதனைகளை ஆர்யதேசத்தின் புனித பூமி முழுவதும் பரப்புதல் மற்றும் இந்த உலகத்திலும் முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் தகுதியை அர்ப்பணித்தல். 

04. புத்தரின் போதனைகள் மற்றும் தத்துவம் மூலம் அனைத்து மனிதகுலத்தின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை அடைய உதவுதல். 

05. அனைத்து நாடுகளிலும் உள்ள தேரவாத சங்கத்தினரிடையே ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவித்தல். 

06. ஆண்கள் மற்றும் பெண்களின் உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் அனைத்து உயிரினங்களிடையேயும் பரஸ்பர மரியாதையை ஊக்குவித்தல். 

07. சுகாதாரம், கல்வி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் சமூக நலனை ஊக்குவித்தல்.

08. சர்வதேச திபிடக மந்திரப் பேரவையின் நோக்கத்தைப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பிற அமைப்புகள், அறக்கட்டளைகள், படிப்பு மையங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மடாலயங்களுடன் ஆதரவளித்து ஒத்துழைத்தல். 

09. பௌத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் பரப்புவதற்கும் இலக்கியங்களை வெளியிட்டு விநியோகித்தல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல்.

வையாவூர் சாலை புத்த விகார்


புத்த விகார், காமாட்சி நகர், வையாவூர் சாலை, காஞ்சீவரம் என்ற முகவரியில் அமைந்துள்ள புத்த விகாரில் திரிபிடகம் பாடும் மாநிகழ்வு 18-02-2025 செவ்வாய் கிழமை காலை 8 மணி துவங்கி மலை 6 மணியளவில் நடந்தது. இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு.

குறைந்தபட்சம் காஞ்சீவர புத்தர் சிலையாவது காட்சிப்படுத்தி இருக்கலாம். பள்ளூர் புத்தர் சிலையை கௌதம சன்ன இங்கு கையாண்டுள்ளார்.

இந்த விகாரில் வண.போதிதர்மா, வண.மணிமேகலை சிலைகள் வைத்து வழிபடப்பட்டுள்ளது. சாஞ்சியை நினைவுறுத்தும் அளவுக்கு சாஞ்சி வடிவத்தை அமைக்கப்பட்டுள்ளது. 


 





தம்ம ஊர்வலம் 

காலை 8 மணிக்கு காஞ்சிவரம் பூக்கடை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி வையாவூர் புத்த விகார் வரை சென்றது.  பிக்கு, உபாசகர், உபாசிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  இந்தியா, வியட்நாம், கம்போடியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, பர்மா நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் அவர்களுக்குரிய உடையுடனும், உபசகர்கள், உபாசிகள் வெள்ளை நிற ஆடையுடனும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது பஞ்சசீலக் கொடிகளை கையில் ஏந்தி, பெரிய புத்தர் சிலையை வண்டியில் வைத்து அழைத்தும், சிறிய புத்தர் சிலைகளை கையில் ஏந்தியும், குட்டையேந்தியம் ஊர்வலம் சென்றது.


 ஸ்தூபி திறப்பு விழா

இவ்விகார் முகப்பில் புத்த கயாவில் உள்ள பகவன் புத்தரின் சாம்பல் சிறு பகுதி ஒரு சிட்டிகை (இன்ச்) அளவு வைத்து ஸ்தூபி நிறுவப்பட்டுள்ளது. ஸ்தூபியை வணங்கி திரிபிடக பாடும் நிகழ்வுக்கு சென்றனர்.


திரிபிடகம் உச்சரித்தல்/பாடுதல்

திரிபிடகம் முழுவதையும் பாடுதல் என்பது இயலாது. திரிபிடகத்தில் ஏதாவது ஒரு பகுதியை படுவது வழக்கம். இங்கு தம்மபதம் எடுத்துக்கொள்ளபட்டது. தம்மபதம் 26 அத்தியாயம் கொண்டுள்ளது. அதில் காலை இரண்டும் மதியம் எட்டும்  என 10 அத்தியாயங்கள் பாடப்பட்டது. பிக்கு சோமானந்த அவர்களின் நூல் தம்ம பதம் என்ற நூல் அளிக்கப்பட்டது.  பாலியில் உள்ள பாடலை பாடும் பொழுது புத்தகத்தை கவனிக்க வேண்டும். பாலியல் பாடிய பின் அதன் பொருளை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் விளக்கப்பட்டது. பின்னர் அடுத்த அத்தியாயம் பாடப்பட்டது. 

 காலையில் 11.30 மணியளவில் முடிந்தது

1. இரட்டைச் செய்யுட்கள் யமகவக்கம் 
2. கருத்துடைமை அப்பமாத வக்கம்
 
மதியம் 3.30 மணியளவில் முடிந்தது
3. சிந்தனை / சித்த வக்கம்
4. புஷ்பங்கள் / புப்ப வக்கம்
5. பேதை / பால வக்கம்
6. ஞானி / பண்டித வக்கம்
7. முனிவர் / அர்ஹந்த வக்கம்
8. ஆயிரம் / ஸஹஸ்ஸ வக்கம்
9. தீயொழுக்கம் / பாப வக்கம்
10. தண்டனை / தண்ட வக்கம்

 


மதியம் மத்திய உணவு, தண்ணீர் அளிக்கப்பட்டது, மலையில் தேனீர் அளிக்கப்பட்டது. பின்னர் சங்க தானம் அளிக்கப்பட்டது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - கௌதம சன்ன, வி சி க தலைவர் -திருமாவளவன் MP,  மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் எஸ். வசந்த, இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு    என பலரும் கலந்து கொண்டனர்



வியாழன், பிப்ரவரி 13, 2025

பொன்னூர் மலை

குந்த குந்தாச்சாரியார்

திருவள்ளுவர்  வந்தவாசியில் வாழ்ந்தவர்




அமைவிடம்

பொன்னூர் மலை, பொன்னூர் கிராமம்,

வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 604408 


பொன்னூர் மலை

பொன்னூர் மலை (அ) குந்தாச்சாரியார் மற்றும் மஹாவீரர் காண படிகளின் தொடக்கத்தில் தர்ம சக்கர ஸ்தூபி  உள்ளது.  


பொன்னூர் மலைகளில் உள்ள ஒரு சிறிய இயற்கை குகையில் குந்த குந்தாச்சாரியார் தவம் செய்து பனை ஓலைகளில் சமண மதம் குறித்து சுமார் 84 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தமிழர் இல்லை. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் பிராகிருத மொழியில் உள்ளது. 


குந்த குந்தாச்சாரியார் பெருமைகள்

01. குந்த குந்தாச்சாரியார் 11 வது வயதில் துறவு ஏற்றார். துறவற ஒழுக்கம், கடுந்தவம் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கினார்.  

02.ஆசாரியார்களும் ஆகமங்களாலும் பெரிதும் போற்றப்படும் கவியுக வைர்வஜனாக திகழ்ந்தார்.   

03. பகவான் மகாவீரரும், கௌதம கணதரருக்கும் அடுத்தவராக மூன்றாம் இடத்தில் வைத்து போற்றப்படும் முதன்மை ஆச்சாரியராக  விளங்குபவர்.  

04.தரை  பூமிலிருந்து 4 அங்குல உயரத்தில் எதையும் தொடாமல் அந்தரத்தில் செல்லும் அற்புத சக்தி பெற்றவர் 

05. திருக்குறள், சமய சாரம், நியம சாரம், சித்தாந்த பாகுடம், மோட்ச பாகுடம், தத்துவார்த்த சூத்திரம் முதலான தத்துவ நூல்களை படைத்தவர். 

06.கருதகேவலி பத்ரபாகுவிற்கு பின்னர் சமணம் இரண்டாக பிளவுபட்டது. திகம்பர சுவேதாம்பர (வெண்ணிற ஆடை மகா சாது) ஏற்பட்ட விவாதத்தின் போது (குஜராத்தில்) திகம்பர தம்மமே மூல நிர்கந்த தம்மம் என்பதை நிலைநாட்டினார். குஜராத்தில் பல சுவேதாம்பரர்களை  திகம்பரர்களாக மாறுவதற்கு காரணமாக இருந்தவர்.  

07. மேலும் பிளவுகள் இருக்கக்கூடாது என்று சாதுக்களை நான்காக பிரிக்கப்பட்டது. 01. திராவிடகணம் (தேசிய கணம்) 02. சேனகணம் 03. காலோக்கணம் 04. பலோத்ரகணம் என பெயரிட்டனர். இந்நான்கும் 01. நந்தி சங்கம் 02. சேனசங்கம் 03. வீரசங்கம் 04. தேவசங்கம் என்ற சங்கங்களாக இயங்கியது. குந்த குந்தர் நந்தி சங்கத்தை சார்ந்தவர் (திராவிட கணம்). 

08.விடுதலை பெறுவதற்கு நிர்வாணம் (ஆடையின்றி) இன்றியமையாதது.  பெண்கள் நிர்வாணமாக அலைய முடியாது. அதனால் பெண்கள் முக்தி அடைய முடியாது. 

 



குந்த குந்தாச்சாரியார் காலம்

குந்த குந்தாச்சாரியார் காலத்தை கணிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை இவர் காலத்தை குறிப்பிடுகின்றனர். 

கிபி ஆறாம் நூற்றாண்டு டாக்டர் கே வி பாடக் குந்த குந்தாச்சாரியார் கி.பி 528ல் தோன்றி இருக்கக்கூடும் என்றுரைக்கிறார். ராஷ்டிரகூட மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய மூன்றாவது கோவிந்த மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கிபி 797 முதல் 802 ஆண்டு காலத்தை சார்ந்த செப்புத் தகடுகளை ஆதாரமாக குறிப்பிடுகிறார்.  

கிபி மூன்றாம் நூற்றாண்டு பண்டிட் நாதுராம் பிரேமி அவர்கள் இந்திர நந்தி ஆசாரியரின் கருத அவதாரத்தை ஆதாரமாகக் கொண்டு மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த பின் சுமார் 683 ஆண்டுகள் கழித்து ஆசாரிய குந்தகுந்தர் தோன்றி இருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார்.  
 
மேலும் தமது சூத்திர பாகுடத்தில் பெண்கள் முக்தி அடையமுடியாது. திகம்பர துறவிகளே உண்மையான அறவோர் என்று குந்த குந்தாச்சாரியார் கூறியுள்ளார்.  
 
ஆச்சாரியர் குந்தகுந்தர் காலத்தில் அடைந்த கிரியா திகம்பர சுவேத மரங்களுக்கு இடையே வாதம் நடைபெற்றது என்று கூறுவதனால் கூறுவதைக் கொண்டே இவர் காலத்தில் சமணம் பிரிந்தது.    

கிபி முதல் நூற்றாண்டு பேராசிரியர் திரு சக்கரவர்த்தி ஐயனார் நந்தி சங்க பட்டா வழியை ஆதாரமாகக் காட்டி குந்தகுந்தர் முதல் நூற்றாண்டை சார்ந்தவர் என்று உரைக்கிறார். ஆசாரியர் தமிழகத்தை சார்ந்தவர் என்றும் கூறுகிறார்.

பொதுமறையாம் திருக்குறளை படைத்தவர் குந்த குந்தாச்சாரியார். அவரது சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும், திருக்குறளை அரங்கேற்றிய திரு உள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் ஆயிற்று. மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்று கருதும் பரவலாயிற்று என்பர் திருக்குறள் காலம் கிபி முதல் நூற்றாண்டில் என்பதால் ஆசாரிய குந்தகுந்தர் காலமும் என பேராசிரியர் குறிப்பிடுகிறார். 

டாக்டர் ஏ.என் உபாத்யே குந்தகுந்தர் முதல் நூற்றாண்டை சார்ந்தவர் ஆனால் திருக்குறளை இயற்றினார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என குறிப்பிடுகிறார்.
 
குந்த குந்தாச்சாரியார் பிறப்பு/ வாழ்விடம்
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டக்கல் அருகே வைரகரூரில் உள்ள கொனகொண்டலா என்ற சிறிய கிராமத்தில் பத்மநந்தியாக ஆச்சார்ய குண்ட் குண்ட் பிறந்தார். ஆனால் அவர் கிராமத்தின் பெயரால் குண்ட் குண்ட் என்று அழைக்கப்பட்டார். 

திகம்பர துறவிகள் எப்பொழுது ஒரே இடத்தில் இருந்து தவம் புரிந்தார் என்று கூறமுடியாது. ஆனால் குந்த குந்தாச்சாரியார் நிலகிரி மலையில் (பொன்னூர் மலை) அதிக நாட்கள் தங்கி இருந்தார். 

திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள்

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூர் வாழ்ந்தவர், வந்தவாசியில் வாழ்ந்தவர் என்கிறார்கள் சமணர்கள். திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று காண்போம். 

திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே காலகட்டத்தில்தான் அந்த மலையில் ‘குந்தக் குந்தர்’ என்னும் சமண முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சமண மதத்தில் ‘திரி’ என்கிற சொல்லாடல் புழக்கத்தில் உண்டு. 'குந்தக் குந்தர்’ அந்த மலையில் அமர்ந்து எழுதிய ‘திரிகுறள்’ தான், திருக்குறளாக மாற்றம் அடைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள சமண கோவில்களில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. 
 
குந்தக் குந்தர் சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும், திருக்குறளை அரங்கேற்றிய திரு உள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் ஆயிற்று மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்று கருதும் பரவலாயிற்று. 





தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் திருக்குறள் சம சமயத்தை சார்ந்தது என்றுரைக்கிறார்    

01.ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரர் பெயர். ரிஷபநாதர் தான் முதல் தீர்த்தங்கரர்.  

02.பொறிவாயில் ஐந்தவித்தான் மற்றும் மலர்மிசை ஏகினான்,  அறவாழி அந்தனன் (தர்மசக்கரம் அறவாழி, விதி,  வினை) சமணத்தை குறிக்கும் சொற்கள். 

03.தாமரை சமண சமய அடையாளம். தீர்த்தங்கரர் நடக்கும்பொழுது அவருடைய திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. 

04.அகிம்சை என்றால் அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை,    புலால் மறுத்தல். பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை          பயக்கும் எனின். பொய் சொல்லினால் பொய் சொல்லியாயினும் கொலையை தடுக்கலாம்.

05.பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தானம் முன் தரும். ஊழலையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது இன்று. பவர் தவிர மற்ற மதத்தினர் யாரும் திருக்குறள் எங்கள் வேதம் எங்கள் ஓட்டு என்று கூறவில்லை

06. நீலகேசி என்னும் நூலில் மொக்க சுருக்கத்தில் அறுபதாம் செய்யுள் உரையிலேயே சமய சிவஞான முனிவர் என்னும் ஜெனர் பொய்மையும் வாய்மை படர்ந்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பது எம் ஒத்து எங்கள் வேதம் என்று உரைக்கிறார்

(சமயங்கள் வளர்த்த தமிழ் - மயிலை சீனி வேங்கடசாமி-பத்தொன்பதாவது தலைப்பில் "ஜைன மதமும் திருக்குறளும்" என்ற தலைப்பு)


மறுக்க வேண்டிய தகவல்கள்

01. அற்புத சக்தி

தரை  பூமிலிருந்து 4 அங்குல உயரத்தில் எதையும் தொடாமல் அந்தரத்தில் செல்லும் அற்புத சக்தி பெற்றவர்.  க்ருத்தபிச்சர்  என்பது மற்றொரு பெயர். அவர் வான் வழியாக சென்ற போது அவரது மயில் பீலிகை தவறி கடலில் வீழ்ந்து விட அருகில் இருந்த தீவு ஒன்றில் காணப்பட்ட கழுகுகளின் இறகுகளை  பீலிகையாக  கொண்டார்.  

இது உயர்வு படுத்தி சொல்ல பயன் படுத்தியது. பௌத்தத்திலும் இலங்கை வரலாற்றை கூறும் தீபவம்சம், மகாவம்சம் நூல்கள் பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை புரிந்ததாக குறிப்பிடுகிறது. மூன்று முறையும் பகவன் புத்தர் வான்வழியாக இலங்கை சென்றதாக குறிப்பிடுகிறது. பெருபான்மையான பௌத்த அறிஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. 

02. திருக்குறள் நூலை படைத்தவர் 

01. திரி குறளை படைத்தது தமிழர் அல்ல என்பது ஏற்புடையது இல்லை. 

02. குந்த குந்தர் எழுதிய நூல்கள் இப்ராகிருத மொழில் உள்ளது. திரி குறளை மட்டும் தமிழில் எழுத கரணம் என்ன?  

03.பெண் பிறவியைத் தாழ்ந்த பிறவியாகச் சமண சமயம் சித்திரிக்கிறது. ஒருவன் யாரையாவது வஞ்சிப்பானானால் (ஏமாற்றுதல் போல்வன) அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை ஆகும். 

பெண்ணாகப் பிறந்த ஒருவர் வீடுபேறு அடைவதற்கு வழியே இல்லை என்பது திகம்பரச் சமணர்களின் முடிவாகும். எனவே, வீடுபேறு அடைய விரும்பும் பெண், அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து துறவு மேற்கொண்டு ஒழுக வேண்டும் என்பது இப்பிரிவினரின் கருத்தாகும்.  

சமணர்களுள் ஒரு பிரிவினரான சுவேதாம்பரர், பெண்கள் துறவு நெறி மேற்கொண்டு மன உறுதியுடன் செயல்பட்டால் அவர்கள் வீடுபேறு அடைய முடியும் என்று நம்பினர். 

04.சமணர்களின் கூற்றுப்படி, உயிரினங்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் வன்முறையாளர்களாகவே கருதப்படுகின்றனர். மருத்துவர்கள் தடுப்பூசிகளை வழங்குவதால், உயர் வாழ்க்கையைப் பாதுகாக்க மருத்துவர்கள் உயிரை எடுக்கிறார்கள். விவசாயிகள் உழவு மற்றும் பயிர்களை நடவு செய்யும் போது உயிரைப் பறிக்கிறார்கள்.

~திருக்குறள் மறுப்பை பிறகு பார்க்கலாம்~

குறிப்பு 
01. குந்த குந்தாச்சாரியர்  வரலாறு - திரு இ ஜம்புகுமாரன் ஜெயின் 
02.  சமயங்கள் வளர்த்த தமிழ் - மயிலை சீனி வேங்கடசாமி