தமிழர் தொன்மைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா ஒரிசா பாலு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மார்ச் 21, சனிக்கிழமை, சென்னையில் எழும்பூரில் உள்ள இக்சா (ICSA) அரங்கதில் "தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்" நிகழ்ச்சியில் ஐயா ஒரிசா பாலு அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது தமிழர் நடுவம்.
கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு
01.தமிழர்களின் தொன்மை வெறும் இலக்கியத்தோடு நின்றுவிடாமல், அது கடல்சார் அறிவியலோடும், நிலவியல் மாற்றங்களோடும் பிணைக்கப்பட்டது என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் திரு. ஒரிசா பாலு அவர்கள்.
02.ஒரிசா பாலு அவர்கள் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி, திருச்சி உறையூரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு காவல் அதிகாரி என்பதால், தமிழகத்தின் பல்வேறு ஊர்களான விழுப்புரம், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் சென்னை போன்ற இடங்களில் வளரும் வாய்ப்பைப் பெற்றார்.
03.இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். குறிப்பாக, சுரங்கம் மற்றும் வெளிநாட்டு இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பணிக்காக ஒரிசா மாநிலத்திற்குச் சென்றார். அங்கு பல ஆண்டுகள் பணியாற்றியதால், "ஒரிசா பாலு" என்ற பெயர் நிலைத்தது.
கடல்சார் ஆய்வுகளும் குமரிக்கண்டத் தேடலும்
01.ஒரிசா பாலு அவர்களின் தேடல் வெறும் தொழிலோடு நின்றுவிடவில்லை. ஒரிசா கடற்கரையில் ஆமைகள் முட்டையிட வருவதைக் கவனித்த அவர், அந்த ஆமைகளின் இடப்பெயர்ச்சிக்கும் தமிழர்களின் கடல்வழிப் பயணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயத் தொடங்கினார்.
02.லெமூரியா மற்றும் குமரிக்கண்டம் தமிழ் இலக்கியங்கள் கூறும் "கடல் கொண்ட தென்னாடு" மற்றும் "தென்புலத்தார்" போன்ற கருத்துகளை வெறும் கற்பனையாகக் கருதாமல், நவீன அறிவியல் தரவுகளோடு ஒப்பிட்டார்.
03.செயற்கைக்கோள் (Satellite) படங்கள் மற்றும் நவீன கடல்சார் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்து கடல் மட்டம் உயர்வால் மூழ்கிய பகுதிகளை அடையாளம் கண்டார்.
04.கடலில் மீன்கள் மற்றும் ஆமைகள் குறிப்பிட்ட இடங்களுக்குத் தேடிச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய தமிழர்களின் கடல் வழிப்பாதைகளை (Sea routes) உலகிற்கு விளக்கினார்.
05.தமிழர்கள் வெறும் தமிழகத்திற்குள் மட்டும் முடங்கியவர்கள் அல்ல, அவர்கள் உலகெங்கும் கடல் வழியாகப் பயணம் செய்து நாகரிகத்தைப் பரப்பியவர்கள் என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முயன்றார். ஆசியா முதல் அமெரிக்கா வரை தமிழர்களின் தொன்மை அடையாளங்கள் சிதறிக் கிடப்பதை அவர் ஆவணப்படுத்தினார்.
தமிழர் தொன்மை
சிந்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் எகிப்து நாகரிகம் என எல்லாவற்றிலும் தமிழருடைய ஊடுருவல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கொரியாவைப் பார்க்கும் போது கொரிய மொழியில் 4000 சொற்கள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் சீனா, பர்மா, தாய்லாந்து, மலேசியா என வெகுவான மரபுகளில் தமிழர்களுடைய மரபு கலந்திருக்கிறது.
இவர் மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாகச் செய்தி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
இயற்கை எய்தினார்
இருதய நோய் காரணமாக (Rela ரெலா மருத்துவமனையில்) 06.07.2023 மாலை இயற்கை எய்தினார்.
திருஉருவபடம் திறப்பு
கம்யூனிஸ்ட் திரு பாவலர் அவர்கள் ஐயா ஒரிசா பாலு அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். ஆனால் ஒரிசா பாலுவை அவர்களை பற்றி ஏதும் பேசவில்லை. அமைப்பாளர் திரு தங்கராஜ் பாண்டியன் ஒரிசா பாலுவை பற்றி பேசினார். ஒரிசா பாலு அவர்களின் மனைவி ராஜேஸ்வரி அவர்கள், ஒரிசா பாலுவை பற்றி பேசினார்கள். ஐயா ஒரிசா பாலு அவர்கள் புத்தகமாக ஏதும் எழுதவில்லை, சமூக ஊடகங்களை தான் பயன்படுத்தினார் என்று.
நான் பேரார்வத்துடன் சென்று இருந்தேன். ஐயா ஒரிசா பாலு அவர்கள் இறப்பதற்கு முன் 13 நூல்கள் எழுதியுள்ளேன் என்றுரைத்தார். ஒவ்வொரு நூலும் 120-160 பக்கங்கள் இருக்கும்.
1. கலிங்கத்தில் தமிழ்2. ஆமைகளும் தமிழர்களும்3 குமரிக்கண்டம்4 கடலில் ஒரு தேடல்5 தமிழர் மதம்6 தமிழால் எழுந்தோம்7. உலகத்தில் தமிழர்8 தென்புலத்தார்9 ராவணன்10 வேந்தன் மரபினர்11 நோயால் விழவில்லை13 தமிழ்தேயம்.
அந்நூல்கள் வெளிவரவில்லை.
இக்சா (ICSA) அரங்கம்
சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைத்தளம் ஆய்வாளர் திரு ஜம்புலிங்கம் எனக்கு அறிமுகம் அளித்தது இக்சா (ICSA) அரங்கம். மிக குறைந்த நேரம் தான் அவர்களிடம் பேசியது. என் வலைதளத்தின் ஆணிவேர் அவர்கள். ASI Director அவர்களிடம் ஒரு வினா எழுப்பி அஞ்சல் அனுப்பி இருந்தேன். என்னை யார் என்றும் தெரியாமல் என் வினாக்களுக்கு பதில் அளித்தவர். அதை போன்று தான் ஐயா ஒரிசா பாலு அவர்கள், மிக எளிமையானவர், என் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். உடல் முதிர்ச்சி மற்றும் அறிவு முதிர்ச்சி உடைவார்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்
ஐயா ஒரிசா பாலு அவர்களின் பேச்சு இக்சா (ICSA) அரங்கத்தில்