வியாழன், பிப்ரவரி 20, 2025

உலக திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு

International Tipitaka Chanting in South India at Conjeevaram

உலக திரிபிடகம் உச்சரிப்பு -காஞ்சீவரம்

Tipitaka Saddhamma Sajjhayana 


உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ITCC நடத்தி வருகிறது. பெரும்பாலும் பகவான் புத்தருடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களில் லும்பினி, சாரநாத், புத்த கயா, குஷிநகர் திரிபிடகம் பாடுதல் நிகழவும். 

ITCC இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் 10/05/2008ஆம் தேதி கையொப்பமிட்டது. 18வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2023 to 12/12/2023 நடைபெற்றது. 19வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2024 to 12/12/2024 நடைபெற்றது. அதன் பிறகு தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டது.  

ITCC 06/02/2025 முதல் 18/02/2025 வரை மூன்று மாநிலங்களில் (தெலுங்கானா, கர்நாடக மற்றும் தமிழ் நாடு) புனித திபிடக சத்தம்மா சஜ்ஜாயனத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. தெலுங்கானாவில் 07/02/2025 முதல் 10/02/2025 வரை நான்கு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. பின்னர் கர்நாடகாவில் 11/02/2025 முதல்  16/02/2025 வரை  ஆறு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. தமிழகத்தில் 18/02/2025 ஒரு நாள் கஞ்சிவரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம் ஒத்துழைப்பில் பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் திரிபிடகம் பாடுதல் நிகழ்வு என்று முடிவானது.  

தெலுங்கானா

01. புத்தவனம் - 07/02/2025 

02. நாகார்ஜுன கொண்டா-  08/02/2025   

03. ஹைதராபாத் மகாபோதி - 09/02/2025

04. ஹுசைன் சாகர் ஹைதராபாத் 10/02/2025

கர்நாடக

01. கலபுரகி 11/02/2025 Kalaburagi 

02. சன்னாட்டி - Sannatti  12/02/2025

03. பைலாகூப் - Bylakuppe - 13/02/2025 

04. மைசூர் - 14/02/2025 

05. வடக்கு பெங்களூரு 15/02/2025 

06. பெங்களூரு மகாபோதி 16/02/2025 

தமிழ் நாடு 

காஞ்சிபுரம் - 18/02/2025 


அமைப்புகள் 

இங்கு கலந்துகொண்ட அமைப்புகள்

01. International Tipitaka Chanting Council (ITCC) சர்வதேச திபிடகா மந்திரப் பேரவை

02. Light of Buddha Dharma Foundation International (LBDFI) புத்த தர்ம அறக்கட்டளை சர்வதேச ஒளி

03. (Government of Tamil Nadu - State minorities commission (TSMC)) தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம். 

04. Tamil Nadu Buddhist Sanga Council (TNBSC)  தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை 

ITCC  நோக்கம்

01. புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் அல்லது பிற புனித தலங்களில், பாலி திபிடகம் என்று அழைக்கப்படும் புத்தரின் புனித நூல்களை ஆண்டுதோறும் உச்சரிப்பதை ஆதரித்தல், ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்.

02. அனைத்து நாடுகளிலிருந்தும் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தேடுதல் மற்றும் ஆண்டுதோறும் திபிடக மந்திர விழாவில் தேரவாத பாரம்பரியத்தின் மகாசங்கத்தினரை ஒன்று திரட்டுதல். 

03. புத்தரின் அசல் போதனைகளை ஆர்யதேசத்தின் புனித பூமி முழுவதும் பரப்புதல் மற்றும் இந்த உலகத்திலும் முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் தகுதியை அர்ப்பணித்தல். 

04. புத்தரின் போதனைகள் மற்றும் தத்துவம் மூலம் அனைத்து மனிதகுலத்தின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை அடைய உதவுதல். 

05. அனைத்து நாடுகளிலும் உள்ள தேரவாத சங்கத்தினரிடையே ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவித்தல். 

06. ஆண்கள் மற்றும் பெண்களின் உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் அனைத்து உயிரினங்களிடையேயும் பரஸ்பர மரியாதையை ஊக்குவித்தல். 

07. சுகாதாரம், கல்வி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் சமூக நலனை ஊக்குவித்தல்.

08. சர்வதேச திபிடக மந்திரப் பேரவையின் நோக்கத்தைப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பிற அமைப்புகள், அறக்கட்டளைகள், படிப்பு மையங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மடாலயங்களுடன் ஆதரவளித்து ஒத்துழைத்தல். 

09. பௌத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் பரப்புவதற்கும் இலக்கியங்களை வெளியிட்டு விநியோகித்தல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல்.

வையாவூர் சாலை புத்த விகார்


புத்த விகார், காமாட்சி நகர், வையாவூர் சாலை, காஞ்சீவரம் என்ற முகவரியில் அமைந்துள்ள புத்த விகாரில் திரிபிடகம் பாடும் மாநிகழ்வு 18-02-2025 செவ்வாய் கிழமை காலை 8 மணி துவங்கி மலை 6 மணியளவில் நடந்தது. இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு.

குறைந்தபட்சம் காஞ்சீவர புத்தர் சிலையாவது காட்சிப்படுத்தி இருக்கலாம். பள்ளூர் புத்தர் சிலையை கௌதம சன்ன இங்கு கையாண்டுள்ளார்.

இந்த விகாரில் வண.போதிதர்மா, வண.மணிமேகலை சிலைகள் வைத்து வழிபடப்பட்டுள்ளது. சாஞ்சியை நினைவுறுத்தும் அளவுக்கு சாஞ்சி வடிவத்தை அமைக்கப்பட்டுள்ளது. 


 





தம்ம ஊர்வலம் 

காலை 8 மணிக்கு காஞ்சிவரம் பூக்கடை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி வையாவூர் புத்த விகார் வரை சென்றது.  பிக்கு, உபாசகர், உபாசிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  இந்தியா, வியட்நாம், கம்போடியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, பர்மா நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் அவர்களுக்குரிய உடையுடனும், உபசகர்கள், உபாசிகள் வெள்ளை நிற ஆடையுடனும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது பஞ்சசீலக் கொடிகளை கையில் ஏந்தி, பெரிய புத்தர் சிலையை வண்டியில் வைத்து அழைத்தும், சிறிய புத்தர் சிலைகளை கையில் ஏந்தியும், குட்டையேந்தியம் ஊர்வலம் சென்றது.


 ஸ்தூபி திறப்பு விழா

இவ்விகார் முகப்பில் புத்த கயாவில் உள்ள பகவன் புத்தரின் சாம்பல் சிறு பகுதி ஒரு சிட்டிகை (இன்ச்) அளவு வைத்து ஸ்தூபி நிறுவப்பட்டுள்ளது. ஸ்தூபியை வணங்கி திரிபிடக பாடும் நிகழ்வுக்கு சென்றனர்.


திரிபிடகம் உச்சரித்தல்/பாடுதல்

திரிபிடகம் முழுவதையும் பாடுதல் என்பது இயலாது. திரிபிடகத்தில் ஏதாவது ஒரு பகுதியை படுவது வழக்கம். இங்கு தம்மபதம் எடுத்துக்கொள்ளபட்டது. தம்மபதம் 26 அத்தியாயம் கொண்டுள்ளது. அதில் காலை இரண்டும் மதியம் எட்டும்  என 10 அத்தியாயங்கள் பாடப்பட்டது. பிக்கு சோமானந்த அவர்களின் நூல் தம்ம பதம் என்ற நூல் அளிக்கப்பட்டது.  பாலியில் உள்ள பாடலை பாடும் பொழுது புத்தகத்தை கவனிக்க வேண்டும். பாலியல் பாடிய பின் அதன் பொருளை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் விளக்கப்பட்டது. பின்னர் அடுத்த அத்தியாயம் பாடப்பட்டது. 

 காலையில் 11.30 மணியளவில் முடிந்தது

1. இரட்டைச் செய்யுட்கள் யமகவக்கம் 
2. கருத்துடைமை அப்பமாத வக்கம்
 
மதியம் 3.30 மணியளவில் முடிந்தது
3. சிந்தனை / சித்த வக்கம்
4. புஷ்பங்கள் / புப்ப வக்கம்
5. பேதை / பால வக்கம்
6. ஞானி / பண்டித வக்கம்
7. முனிவர் / அர்ஹந்த வக்கம்
8. ஆயிரம் / ஸஹஸ்ஸ வக்கம்
9. தீயொழுக்கம் / பாப வக்கம்
10. தண்டனை / தண்ட வக்கம்

 


மதியம் மத்திய உணவு, தண்ணீர் அளிக்கப்பட்டது, மலையில் தேனீர் அளிக்கப்பட்டது. பின்னர் சங்க தானம் அளிக்கப்பட்டது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - கௌதம சன்ன, வி சி க தலைவர் -திருமாவளவன் MP,  மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் எஸ். வசந்த, இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு    என பலரும் கலந்து கொண்டனர்